பஸ் வசதி இல்லாத பள்ளிக்கு வேன் ஏற்பாடு செய்த மக்கள்

திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கஸ்பா பொய்கைப்பட்டியில், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இந்த கிராமத்துக்கு பள்ளி நேரத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ், கோடை விடுமுறையில் நிறுத்தப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், இந்த கிராமத்துக்கு மீண்டும் பஸ் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், கீழகோட்டாம்பட்டியைச் சேர்ந்த, 21 மாணவ - மாணவியர் இந்த பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையிலும், போக்குவரத்து வசதிக்காகவும், இந்த பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து, வேன் ஏற்பாடு செய்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவ - மாணவியரை, அந்த வேனில் அழைத்து வந்து, இனிப்பு கொடுத்து வரவேற்றனர். அமைச்சர் மகேஷின் சொந்த மாவட்டத்தில், பஸ் வசதியின்றி தவித்த பள்ளி மாணவர்களுக்கு கிராம மக்கள் சொந்த செலவில் வாகன வசதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்
-
கரைகள், மடைகள் சேதம்; கருவேல மரங்களால் பாதிப்பு: கே.நெடுங்குளம் கண்மாய் பாசன விவசாயிகள் கவலை
-
தேரை வடக்கு வாசல் முன் நிலைநிறுத்த பக்தர்கள் எதிர்ப்பு
-
சிவன் கோயில் தேரோட்டம்
-
சிவகாசியில் பருத்தி, வாழை மரங்களை வேட்டையாடும் காட்டுப் பன்றிகள்
-
ஸ்ரீவி., பஜார் வீதி நடைபாதைகளில் கொட்டப்படும் கழிவுகளால் பாதிப்பு
-
தனியார் கட்டடங்களில் தீயணைப்பான்கள் அவசியம்: காலாவதி குறித்து அதிகாரிகள் ஆய்வு தேவை