துருக்கி, கிரீஸ், சிரியா நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வெளியான பகீர் வீடியோ

அங்காரா: துருக்கி மத்திய தரைக்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவானது.
@1brதுருக்கியின் மத்திய தரைக்கடல் கடலோர நகரம் மர்மாரிஸ். இங்கு இன்று (ஜூன்3) 6.2 என்ற ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
நிலநடுக்கம் மத்திய தரைக்கடலில் மையம் கொண்டிருந்தது. கிரீசில் உள்ள தீவான ரோட்ஸ் உள்ளிட்ட அண்டை பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியது. நில அதிர்வை உணர்ந்த மக்கள் பீதி அடைந்து, வீடுகளில் இருந்து வெளியே ஓடினர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட தருணத்தில் வீடுகள் குலுங்கியது, அறைகளின் உள்ளே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகி உள்ளது.
தூக்கத்தில் இருந்த பலர் பயத்தில் ஜன்னல்கள் வழியாகவும், பால்கனியில் இருந்தும் எட்டி குதித்தனர். இதில் 7 பேர் காயம் அடைந்தனர். வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய முதன்மை தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள், எகிப்து, சிரியா ஆகிய நாடுகளிலும் எதிரொலித்தது.
முன்னதாக 2023ம் ஆண்டு 7.8 என்ற ரிக்டர் அளவுகோலில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 53,000 பேர் பலியாகினர் என்பது மறக்க முடியாத ஒன்று.
வாசகர் கருத்து (6)
ashok kumar R - ,இந்தியா
03 ஜூன்,2025 - 22:24 Report Abuse

0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
03 ஜூன்,2025 - 11:44 Report Abuse

0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
03 ஜூன்,2025 - 08:22 Report Abuse

0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
03 ஜூன்,2025 - 08:06 Report Abuse

0
0
செல்வேந்திரன்,அரியலூர் - ,
03 ஜூன்,2025 - 08:38Report Abuse

0
0
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
03 ஜூன்,2025 - 08:52Report Abuse

0
0
Reply
மேலும்
-
திருச்சுழி அருகே ரோடு பணிகள் ஆய்வு
-
தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவில் இருந்து லாட்டரி கடத்தல் ரயில்வே போலீசார் கண்காணிப்பு தீவிரம்
-
சிதிலமடைந்து வரும் கோயில்கள் புனரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
-
பஸ் ஓட்டும்போது டிரைவர் துாங்கினால் ஒலி எழுப்பும் கருவி 500 பஸ்களில் அமைக்க முடிவு
-
நாவல் பழம் கிலோ ரூ.200க்கு விற்பனை
-
ரூ.10.55 லட்சம் மோசடி துாத்துக்குடி நபர் கைது
Advertisement
Advertisement