இரண்டாவது சுற்றில் சிந்து * இந்தோனேஷிய பாட்மின்டனில்...

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையரில், 17வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்து, 33வது இடத்திலுள்ள ஜப்பானின் ஓகுஹராவை சந்தித்தார்.
முதல் செட்டை 22-20 என வென்ற சிந்து, அடுத்த செட்டை 21-23 என இழந்தார். 3வது செட்டை 21-15 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 19 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் சிந்து 22-20, 21-23, 21-15 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
இந்தியாவின் அனுபமா 15-21, 9-21 என தென் கொரியாவின் கிம்மிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரக்சித்தா 21-14, 15-21, 12-21 என தாய்லாந்தின் கேட்தாங்கிடம் வீழ்ந்தார்.
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் லியோ ராலி, பாகஸ் மவுலானா ஜோடியை முதல் சுற்றில் எதிர் கொண்டது. இதில் இந்திய ஜோடி 18-21, 21-18, 21-14 என போராடி வெற்றி பெற்றது.
ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரர் பிரனாய், இந்தோனேஷிய வீரர் பர்ஹானை சந்தித்தார். இதில் பிரனாய் 17-21, 18-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். இளம் இந்திய வீரர் லக்சயா சென், 11-21, 22-20, 15-21 என சீன வீரர் யு க்யு ஷியிடம் வீழ்ந்தார்.

Advertisement