அதற்கும் பா.ஜ.,வுக்கும் தொடர்பு இல்லை; சொல்கிறார் பா.ஜ., தலைவர் நயினார்!

கோவை: குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார். அதற்கும் பா.ஜ.,வுக்கும் தொடர்பு இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மதுரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காகவே வரும் ஜூன் 8ம் தேதி அமித்ஷா வருகிறார். முருக பக்தர் மாநாட்டில் ஒலிக்கும் குரல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும். அனைவரும் ஓரணியில் இணைந்து தி.மு.க., அரசைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே நிலைப்பாடு.
த.வெ.க., தலைவர் விஜய்க்கும் இதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார்.
அதற்கும் பா.ஜ.,வுக்கும் தொடர்பு இல்லை.
பெங்களூரில் நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடக மாநிலத்தின் ஆளும் கட்சியினர் சரியான ஏற்பாடு செய்யாததே காரணம். இது போன்ற நிகழ்வுகளை பாதுகாப்போடு நடத்த வேண்டும்.
மஹாராஷ்ராவில் அதைவிட அதிகமாக கூட்டம் கூடிய போதும் கூட சிறு பிரச்சனை ஏற்படவில்லை. தேனி விவசாயி தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணையும் இழப்பீடும் வழங்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.





மேலும்
-
நான் பேசியதை அண்ணாமலை வெளியிடட்டும்: அமைச்சர் மா.சு., பதில்
-
சிந்து நதி ஒப்பந்தம் வேண்டும்: இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்!
-
திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 7ல் குடமுழுக்கு விழா!
-
வங்கதேசத்தில் ஏப்ரல் 2026ல் தேர்தல்: குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த யூனுஸ்
-
டிரம்பின் அதிபர் பதவியை துணை அதிபருக்கு கொடுக்க மஸ்க் விருப்பம்; ஜே.டி வான்ஸ் பதில் இதுதான்!
-
ஜி7 மாநாடு; பிரதமர் மோடியை அழைத்தார் கனடா பிரதமர்