சிக்கிம், கோவா, தெலுங்கானா மாநிலங்கள் உதய நாள் நிகழ்ச்சி
புதுச்சேரி : சிக்கிம், கோவா, தெலுங்கானா மாநிலங்களின் உதய நாள் கவர்னர் மாளிகையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். கவர்னரின் செயலர்மணிகண்டன் வரவேற்றார்.விழாவில் அந்ததந்த மாநிலங்களின்சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிக்கிம், கோவா, தெலுங்கானா மாநிலங்களின் கலாசாரம் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில், கவர்னர் பேசுகையில்,'ஒரே பாரதம் உன்னத பாரத திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உதய நாட்கள் கொண்டாடப்படுவதன் நோக்கம் தேசிய ஒற்றுமையை ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதை வலியுறுத்துகிறது.
நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றை உணர்வை விதைக்கும். இந்திய பண்பாடும் கலாசாரமும் சமுதாய வரலாறும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.
ஒவ்வொரு மாநிலமும் அதன் தன் சிறப்புகளோடு நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றி வருகிறது.
50வது உதயநாளை கொண்டாடும் சிக்கிம் இயற்கை வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக உள்ளது. தெலுங்கானா தொழில்நுட்ப மையமாக உள்ளது. கோவா சுற்றுலா வளர்ச்சியின்அடையாளமாக உள்ளது' என்றார்.
மேலும்
-
11 பேர் உயிரிழந்த விவகாரம்: பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது பாய்ந்தது வழக்கு
-
தொன்மை வாய்ந்த கோவிலை தெருவில் விட்டது அரசு: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
-
அனைவருக்குமான பொருளாதாரம் தேவை: கேட்கிறார் ராகுல்
-
20 மாதங்களுக்கு பின் பிணைக்கைதிகள் 2 பேர் உடல் மீட்பு; ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் சபதம்
-
டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை
-
சத்தீஸ்கரில் முக்கிய நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி