தொட்டால் தொகை கொட்டும் என்று ரூ.12.71 லட்சம் பறித்த 2 பேர் கைது
ஈரோடு, ஈரோடு, கதிரம்பட்டியை சேர்ந்தவர் நந்தகுமார், 30; டெலிகிராம் மூலம் இருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதில் ஒரு லிங்க்கை அனுப்பி, அதை தொட்டால் பணம் கிடைக்கும் என ஆசை காட்டியுள்ளனர். அதன்படி லிங்க்கை தொட்ட போதெல்லாம், சிறு தொகை கிடைத்தது. இதை நம்பி, 12.௭௧ லட்சம் ரூபாய் அனுப்பிய நிலையில், அதன் பின் பணம் வரவில்லை.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு சைபர் க்ரைம் போலீசில் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நந்தகுமாரை ஏமாற்றி பணம் பறித்த, தர்மபுரி மாவட்டம் குப்பூரை சேர்ந்த சண்முகம், 43, சுதாகர், 44, ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொன்மை வாய்ந்த கோவிலை தெருவில் விட்டது அரசு: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
-
அனைவருக்குமான பொருளாதாரம் தேவை: கேட்கிறார் ராகுல்
-
20 மாதங்களுக்கு பின் பிணைக்கைதிகள் 2 பேர் உடல் மீட்பு; ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் சபதம்
-
டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை
-
சத்தீஸ்கரில் முக்கிய நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
இடத்தை அளந்து தர ரூ. 3 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் சர்வேயர்!
Advertisement
Advertisement