தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
ஊத்தங்கரை, ஊத்தங்கரையில், தி.மு.க., முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஊத்தங்கரை ரவுண்டானா மற்றும் வெங்கடதாம்பட்டி பஞ்., காந்திநகரில் கருணாநிதியின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். தெற்கு ரஜினிசெல்வம், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, நகர செயலாளர் தீபக், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி காமராஜ், அவை தலைவர் தணிகை குமரன், விவசாய அணி சத்திய நாராயணன், உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
* போச்சம்பள்ளியில், ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் நேற்று, கருணாநிதி உருவ படத்திற்கு மலர் துாவி, பட்டாசு வெடித்து, இனிப்பு மற்றும் 200க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. அதேபோல் மத்துாரில் ஒன்றிய செயலாளர் வசந்தரசு தலைமையில், கருணாநிதி உருவ படம் வைத்து மலர் துாவி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
வேலம்பட்டியில் பேரூராட்சி தலைவர் தம்பிதுரை தலைமையில், கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும்
-
11 பேர் உயிரிழந்த விவகாரம்: பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது பாய்ந்தது வழக்கு
-
தொன்மை வாய்ந்த கோவிலை தெருவில் விட்டது அரசு: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
-
அனைவருக்குமான பொருளாதாரம் தேவை: கேட்கிறார் ராகுல்
-
20 மாதங்களுக்கு பின் பிணைக்கைதிகள் 2 பேர் உடல் மீட்பு; ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் சபதம்
-
டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை
-
சத்தீஸ்கரில் முக்கிய நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி