மண் கடத்திய 3 லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி, தேவசமுத்திரம் வி.ஏ.ஓ., ரிஷிவந்தியன் மற்றும் அலுவலர்கள், கிருஷ்ணகிரியில், சேலம் - பெங்களூரு சாலை தனியார் பள்ளி அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. ரிஷிவந்தியன் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
* ஓசூர் தாசில்தார் குணசிவா, பழைய ஆனைக்கல் சாலையிலும், மத்திகிரி ஆர்.ஐ., தர்மன், அந்திவாடி சோதனைச்சாவடி அருகே நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஒரு லாரியில், 4 யூனிட் மண் மற்றும் மற்றொரு லாரியில், 20 யூனிட் கல் ஆகியவற்றை, உரிய அனுமதி சீட்டு இல்லாமல் கொண்டு செல்வது தெரிந்தது. 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
மேலும்
-
தொன்மை வாய்ந்த கோவிலை தெருவில் விட்டது அரசு: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
-
அனைவருக்குமான பொருளாதாரம் தேவை: கேட்கிறார் ராகுல்
-
20 மாதங்களுக்கு பின் பிணைக்கைதிகள் 2 பேர் உடல் மீட்பு; ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் சபதம்
-
டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை
-
சத்தீஸ்கரில் முக்கிய நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
இடத்தை அளந்து தர ரூ. 3 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் சர்வேயர்!