ஓசூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா, தி.மு.க., சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
ஓசூர் தாலுகா அலுவலக சாலையிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு கீழே வைத்திருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் மற்றும் கட்சியினர், மலர் துாவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பாகலுார் சாலையில், பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ., அன்னதானம் வழங்கினார்.
அதேபோல், பாகலுார், பேரிகை, சூளகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி பஸ் ஸ்டாண்டுகளில், கருணாநிதி படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்திய எம்.எல்.ஏ., பிரகாஷ், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.
மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன்,
மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
11 பேர் உயிரிழந்த விவகாரம்: பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது பாய்ந்தது வழக்கு
-
தொன்மை வாய்ந்த கோவிலை தெருவில் விட்டது அரசு: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
-
அனைவருக்குமான பொருளாதாரம் தேவை: கேட்கிறார் ராகுல்
-
20 மாதங்களுக்கு பின் பிணைக்கைதிகள் 2 பேர் உடல் மீட்பு; ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் சபதம்
-
டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை
-
சத்தீஸ்கரில் முக்கிய நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி