இனி இதைத் தாங்கிக்கொள்ள முடியாது; டிரம்ப் நிர்வாகத்தின் மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவிற்கு எலான் மஸ்க் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கு கடந்தாண்டு இறுதியில் நடந்த தேர்தலின்போது, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்புக்கு, பணக்கார தொழிலதிபரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார்.
சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துக்கு, செலவினங்களை குறைப்பதற்காக ஆலோசனை வழங்கும் அமைப்பில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவிற்கு எலான் மஸ்க் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மன்னிக்கவும், ஆனால் என்னால் இனி இதைத் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த மிகப்பெரியசெலவு மசோதா ஒரு அருவருப்பானது. இதற்கு ஓட்டளித்தவர்கள் வெட்கப்படுகிறார்கள். நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அது உங்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது என்ன மசோதா?
* டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதா, குறுகிய பெரும்பான்மையில், பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. அடுத்தது, செனட் சபையில் நிறைவேற வேண்டும்.
* ஆயிரம் பக்கத்துக்கு மேல் உள்ள இந்த மசோதாவில், 2017ல் டிரம்ப் கொண்டு வந்த வரி சீர்திருத்தங்களை நீட்டிப்பது, வரிச்சலுகை அளிப்பது ஆகியவை முக்கிய அம்சமாகும்.
* மேலும், குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவதும் இதில் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இந்த மசோதாவிற்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.






மேலும்
-
பணியின்போது இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்கல்
-
இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டடம்
-
'பசுமை மாநிலமாக மாற்ற மக்கள் முன்வர வேண்டும்'
-
பெண் தலையாரியிடம் நகை பறிப்பு: வாலிபர் கைது
-
கலெக்டர் அலுவலக கடைகளை அகற்ற உத்தரவு சங்கத்தினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாக்குவாதம்
-
ராஜாகோரி சுடுகாட்டில் 1,500 மரக்கன்றுகள் நடவு