பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ல் தொடக்கம்; மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
ஆண்டுக்கு மூன்று முறை பார்லிமென்ட் கூட்டப்படுவது வழக்கம். ஆண்டு துவக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும். இதில், ஜனாதிபதி உரை, பட்ஜெட் தாக்கல், நிறைவேற்றம், மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், நிதி மசோதா உள்ளிட்டவை இடம்பெறும்.
அடுத்ததாக மழைக்கால கூட்டத்தொடர்; மூன்றாவதாக குளிர்கால கூட்டத்தொடர். இந்த கூட்டத்தொடர்கள் இரண்டிலுமே பெரும்பாலும் மசோதாக்கள் நிறைவேற்றம் உள்ளிட்ட அரசு அலுவல்களே பிரதானமாக இடம்பெறும்.
இந்நிலையில், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து விவாதிக்க பார்லி., சிறப்பு கூட்டத்தை இந்த மாதமே கூட்டும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்
-
கமலின் 'தக்லைப்' படத்தை காண ஓசூரில் குவிந்த கர்நாடக ரசிகர்கள்
-
போலீஸ் கஸ்டடியில் நக்சல்; பழங்குடியின கிராமத்தில் விசாரணை
-
'போதைப்பொருட்கள் தடுக்க ரெய்டு அதிகரிக்க வேண்டும்'
-
வீட்டுக்குள் வந்த சிறுத்தை; விடாமல் துரத்திய வளர்ப்பு நாய்
-
மாநகர போலீசார் 5 பேர் 'சஸ்பெண்ட்'
-
கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியம்: கபில்தேவ் காட்டம்