கால்பந்து: இந்தியா ஏமாற்றம்

பதும் தானி: நட்பு கால்பந்தில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தாய்லாந்திடம் தோல்வியடைந்தது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் (6 பிரிவு) பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 127 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
இதற்கு தயாராகும் வகையில் நட்பு போட்டியில் பங்கேற்றது. தாய்லாந்தின் தம்மசாட் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் 99 வது இடத்திலுள்ள தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. போட்டியின் 8வது நிமிடத்தில் தாய்லாந்தின் பென் டேவிஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 0-1 என பின் தங்கியது.
இரண்டாவது பாதியில் இந்திய அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. சரியான 'பினிஷிங்' இல்லாததால் கோல் அடிக்க முடியவில்லை.
போட்டியின் 59 வது நிமிடத்தில் தனி ஒருவனாக பந்தை கொண்டு சென்ற தாய்லாந்து வீரர் அர்ஜிவிராஜ், பந்தை வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார்.
முடிவில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. தாய்லாந்துக்கு எதிராக இது, இந்திய அணியின் 13வது தோல்வி (7 வெற்றி, 7 'டிரா') ஆனது.
மேலும்
-
ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு
-
பாகிஸ்தானில் ஏழ்மை நிலையில் 10 கோடி பேர்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
-
டிரம்ப்- மஸ்க் மோதல் உச்சம்; டெஸ்லா நிறுவன பங்குகள் கடும் சரிவு
-
காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்