மாநில கோகோ போட்டி; அமைச்சர் பரிசளிப்பு

புதுச்சேரி; புதுச்சேரி அமெச்சூர் கோகோ சங்கம், மண்வாசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மாநில அளவிலான 41வது சீனியர் கோகோ சாம்பியன்ஷிப் போட்டி திருக்காஞ்சியில் நடந்தது.

இரண்டு நாட்கள் நடந்த இப்போட்டியில், புதுச்சேரியில் இருந்து ஆடவர் பிரிவில் 10 அணிகளும், மகளிர் பிரிவில் 9 அணிகளும் பங்கேற்றன.

இதில் ஆண்கள் பிரிவில் திலாஸ்பேட்டை ஒயிண்ட் அணி முதல் பரிசும், மேல் திருக்காஞ்சி மண்வாசம் இளைஞர் அணி இரண்டாம் பரிசும், அரியூர் தனசேகரன் அணி மூன்றாம் பரிசும், கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அணி நான்காம் பரிசு பெற்றது.

மகளிர் பிரிவில் தில்லையாடி வள்ளியம்மை அணி முதல் பரிசும், மேல்சாத்தமங்கலம் புதிய பாரதம் அணி இரண்டாம் பரிசும், மங்கலம் போனிக்ஸ் குழு மூன்றாம் பரிசும், வீமன்நகர் என்.ஆர்.அணி நான்காம் பரிசும் பெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். சங்க செயலளர் முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பார்த்திபகுமார், இணை செயலாளர் சீத்தாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை மண்வாசம் இளைஞர் மன்ற கவுரவத் தலைவர் செல்வராசு, நிர்வாகிகள் ஆறுமுகம், லிங்கேஷ் செய்திருந்தனர்.

Advertisement