டில்லியில் சட்ட விரோத குடியேற்றம்: வெளிநாட்டினர் 71 பேர் நாடு கடத்தல்

புதுடில்லி: டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வந்த வெளிநாட்டினர் 71 பேர் நாடு கடத்தப்பட்டனர்.
டில்லியின் உத்தம் நகர் மற்றும் சாவ்லா ஆகிய பகுதிகளில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக குடியேறி, சிலர் வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக குடியேறியவர்களை போலீசார் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி கடந்த மே மாதம் துவாராகா மாவட்டத்தில், சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினார் 71 பேரை போலீசார் கைது செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். அவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது விசாரணையில் அம்பலமானது.
இதில், வங்கதேசத்தினர் 41 பேர், மியான்மரின் ரோஹிங்கியா மக்கள் 17 பேர், நைஜீரியா நாட்டினர் 13 பேர் ஆவர். அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் கஸ்டடியில் இருந்தனர்.
இந்நிலையில், தற்போது அவர்கள் தங்களது தாயகங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விசாக்கள் இல்லாமல் அல்லது சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.






மேலும்
-
5 ரூபாய் 'பிஸ்கட்' காசாவில் ரூ.2,400க்கு விற்பனை
-
ஓடும் ரயிலில் மனைவியிடம் கொள்ளை; தடுத்த டாக்டர் கை துண்டானது
-
'பிடிவாதம் காட்டாமல் முடிவெடுங்கள்' தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., அறிவுரை
-
குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில் ரூ.90 கோடி ஊழல்; அன்புமணி குற்றச்சாட்டு
-
விஜய் ராஜா நிறுவனத்திற்கு விருது
-
அதிநவீன வசதியுடன் உருவாகும் பிரம்மாண்ட சிறை