உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா கடும் பதிலடி கொடுக்கும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

7


வாஷிங்டன்: உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா கடும் பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.


உக்ரைன் மீது 2022 பிப்.,ல் ரஷ்யா தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டார்.

ஆனால் இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் சமீபத்தில் இரு நாடுகளும் பேச்சு நடத்தின. அதில் முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில் 117 ட்ரோன்களை ஏவி, ரஷ்யாவின் விமானப்படை தளங்களை குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷ்யாவின் 30 போர் விமானங்கள் சேதமடைந்தன. மேலும் ரஷ்யா - கிரீமியாவை இணைக்கும் பாலத்தையும் குண்டுகள் வைத்து தகர்த்தது.



இந்த சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசினார். அதன்பின் வெளியிட்டுள்ள செய்தியில்,'உக்ரைனின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ரஷ்ய அதிபர் கூறியுள்ளார்.


அதனால் இரு தரப்புக்கும் இடையே தற்போதைக்கு போர் நிறுத்தம் ஏற்பட சாத்தியமில்லை' என அவர் கூறியுள்ளார்.

Advertisement