ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்: 3ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை: பூவிருந்தவல்லி, போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு அடைந்துள்ளது.
பூவிருந்தவல்லி-போரூர் இடையேயான வழித்தடத்தில் 2.5 கிமீ தொலைவுக்கு முதல் கட்டமாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மார்ச் 21ம் தேதி நடைபெற்றது. 2ம் கட்ட சோதனை ஓட்டம் ஏப்.28ம் தேதி நடைபெற்றது.
இந் நிலையில் 3ம் கட்ட சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஓட்டம் போரூரில் இருந்து பூவிருந்தவல்லி வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
முதல் 2 கட்ட சோதனை ஓட்டங்கள், அப்லைனில் நடைபெற்ற நிலையில், 3ம் கட்ட சோதனை ஓட்டம் டவுன்லைனில் நடைபெற்றுள்ளது. ஒரு மாதத்திற்குள் முழு வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் டிசம்பர் இறுதிக்குள் இந்த மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மெட்ரோ ரயில் இயக்குநர் சித்திக் கூறி உள்ளார்.
மேலும்
-
திருவண்ணாமலையில் சட்ட விரோத கட்டடங்கள் அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன: ஐகோர்ட்
-
நெல்லை அரசு பஸ் பணிமனையில் 18,000 லிட்டர் டீசல் இருப்பு குறைவு; 6 பேர் 'சஸ்பெண்ட்'
-
5 ரூபாய் 'பிஸ்கட்' காசாவில் ரூ.2,400க்கு விற்பனை
-
ஓடும் ரயிலில் மனைவியிடம் கொள்ளை; தடுத்த டாக்டர் கை துண்டானது
-
'பிடிவாதம் காட்டாமல் முடிவெடுங்கள்' தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., அறிவுரை
-
குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில் ரூ.90 கோடி ஊழல்; அன்புமணி குற்றச்சாட்டு