ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; ஈமு பார்ம்ஸ் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை

கோவை: சுசி ஈமு நிதி நிறுவனம், 7.61 கோடி ரூபாய் மோசடி வழக்கில், அந்த நிறுவன அதிபர் குருசாமிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம், ஐந்து ரோடு சிக்னல் பகுதியிலுள்ள காம்பளக்சில், 'சுசி ஈமு பார்ம்' என்ற நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஆசை வார்த்தையை நம்பி, நுாற்றுக்கணக்கானோர் டிபாசிட் செய்தனர். ஆனால், முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பித் தராமல் 385 பேரிடம், 7.61 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது.
இது தொடர்பாக, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, குன்னத்துார் ரோட்டை சேர்ந்த அந்த நிறுவன நிர்வாக இயக்குநர் குருசாமி, 45, பொதுமேலாளர் கதிர்வேல், ஊழியர் சுரேஷ் ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான இவர்கள் மீதான விசாரணை, 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி செந்தில்குமார் நேற்று, குற்றம் சாட்டப்பட்ட குருசாமிக்கு, 10 ஆண்டுகள் சிறை, 7.89 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
கோவை மற்றும் ஈரோட்டில் பதிவான, இரண்டு மோசடி வழக்குகளில், ஏற்கனவே, குருசாமிக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





மேலும்
-
பேரிடரை எதிர்கொள்ள உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியம் அவசியம்; பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை
-
தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!