ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் 3 பேர் பலி

1

கீவ்: உக்ரைனில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலால் கார்கிவ் நகரில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.


கடந்த சில வாரங்களாக, உக்ரைன் மீது தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, இவ்விரு நாடுகளும் சமாதான ஒப்பந்தத்தை விரைவில் எட்டும் என்ற நம்பிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக, சமீபத்தில் உக்ரைன், ரஷ்யாவின் விமானத் தளங்களில் திடீரென ட்ரோன் தாக்குதல்களை நடத்தி, அதிர்ச்சி அளித்தது. அதை தொடர்ந்து, ரஷ்யா இன்று
ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் கார்கிவ் நகரத்தைத் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக உக்ரைன் விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:

உக்ரைனின் கிழக்கு நகரமான கார்கிவ் மீது ரஷ்யா இன்று பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. இதில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டு, 21 பேர் காயமடைந்துள்ளனர்.

இது, ரஷ்யாவின் பெரும் தாக்குதல்களில் ஒன்றாகும். இந்த 3-ஆண்டு போரில் ரஷ்யாவின் கொடூரமான தாக்குதல் உத்தியின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. ரஷ்யா இரவு முழுவதும் 215 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது. இதில், உக்ரைனின் விமான பாதுகாப்பு படைகள் 87 ட்ரோன்கள் மற்றும் 7 ஏவுகணைகளைத் தடுத்து சுட்டு வீழ்த்தியது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement