நம்மாழ்வார் விருது: கவர்னர் ரவி அறிவிப்பு

சென்னை: கவர்னர் மாளிகையில், கவர்னர் ரவி தலைமையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.இதில் விவசாயம் தொடர்பான வல்லுநர்கள் பங்கேற்றனர்.


சுவர்னர் மாளிகை சார்பில் 'நம்மாழ்வார் சிறந்த முதுகலை ஆராய்ச்சி விருது (இயற்கை விவசாயம்)' என்ற புதிய விருது நிறுவப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த டாக்டர் ஜி. நம்மாழ்வாரின் பெயரில் இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த விருது, இயற்கை வேளாண் துறையில் சிறந்த ஆராய்ச்சி மேற்கொண்ட மாணவருக்கு ஆண்டுதோறும் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும். இதில் ரூ. 50,000 பணப்பரிசு, தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என கவர்னர் தெரிவித்துள்ளார்.

Advertisement