பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்: இந்தியாவுக்கு பிரிட்டன் ஆதரவு

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்ததுடன், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி ஆதரவு தெரிவித்தார்.
பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது வர்த்தகம், ஆழமான நட்பு, உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றை குறிப்பிட்டு பிரதமர் மோடி திருப்தி தெரிவித்தார்.
மேலும், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருக்கு மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, அவரை விரைவில் இந்தியாவுக்கு வர வேண்டும் என மீண்டும் அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து டேவிட் லாம்மி கூறியதாவது: வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, தொழில்நுட்பம், புதுமை மற்றும் தூய்மையான எரிசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் பிரிட்டன் தனது வலுவான ஆதரவை அளிக்கிறது.
மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறோம்.தொழில்நுட்ப பாதுகாப்பு முன்முயற்சியின் கீழ் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளை வடிவமைப்பதற்கான அதன் திறன் திருப்திகரமாக உள்ளது.இவ்வாறு டேமிட் லாம்மி கூறினார்.


மேலும்
-
இ.ஆட்டோ ஓட்ட தயாராகும் கராத்தே பயிற்சி பெற்ற பெண்கள்; புதுச்சேரி நகராட்சி புது முயற்சி
-
அய்யனார் பெரியசுவாமி கோவில் வரும் 16ல் கும்பாபிேஷகம்
-
பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து: பெண் பலி
-
வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வாழ வைக்கும் புதுச்சேரி .
-
மதுரை மாநாடு வெற்றி பெறும்!
-
உணவில் சுகாதாரம் கேள்விக்குறி! நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்