'மேன்ஹோலில்' அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பகுதியில் இருந்து, ஏகாம்பரநாதர் கோவில் கிழக்கு மாட வீதி, பெருமாள் தெரு வழியாக புதிய ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை உள்ளது.

இதுதவிர, ஏகாம்பரநாதர் கோவில் கிழக்கு மாட வீதியில், காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பளார் அலுவலகம் மற்றும் காவலர்கள் குடியிருப்புகள் உள்ளன.

ஒலிமுகமதுபேட்டை, பஞ்சுப்பேட்டை, பருத்திக்குளம் ஆகிய பகுதியினர் தங்களின் தேவைகளுக்கு ஏகாம்பரநாதர் கிழக்கு மாட வீதி வழியாக வந்து செல்கின்றனர்.

இந்த சாலையில் இருக்கும் மேன்ஹாலில் அடைப்பு ஏற்பட்டு,கழிவுநீர் வெளியேறி ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே, சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள், 'மேன்ஹாலில்' ஏற்பட்ட அடைப்பை நீக்கி, கழிவுநீர் சாலையில் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement