சோனியா திடீரென மருத்துவமனையில் அனுமதி

ஷிம்லா: காங்., முன்னாள் தலைவர் சோனியா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
78 வயதான சோனியா, தனது மகள் பிரியங்காவுடன் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஷிம்லாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அங்குள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஹிமாச்சல பிரதேச முதல்வரின் முதன்மை ஆலோசகர் நரேஷ் சவுகான் கூறுகையில், "சிறிய உடல் பிரச்னைகள் காரணமாக, வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சோனியா, இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை," எனக் கூறினார்.
மேலும்
-
அய்யனார் பெரியசுவாமி கோவில் வரும் 16ல் கும்பாபிேஷகம்
-
பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து: பெண் பலி
-
வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வாழ வைக்கும் புதுச்சேரி .
-
மதுரை மாநாடு வெற்றி பெறும்!
-
உணவில் சுகாதாரம் கேள்விக்குறி! நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்
-
அடையாளம் இழக்கும் வரலாற்று சின்னம் மீட்டெடுக்க பொதுமக்கள் கோரிக்கை!