பணமில்லா பரிவர்த்தனை கண்டக்டர்களுக்கு பாராட்டு

விழுப்புரம்: அரசு பஸ்களில் அதிகளவில் பணமில்லா பரிவர்த்தனை செய்த கண்டக்டர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதன்படி, விழுப்புரம் கோட்டத்தில் அதிகமான பணமில்லா பரிவர்த்தனைகள் செய்த கண்டர்களை பாராட்டி, கோட்ட நிர்வாக இயக்குநர் குணசேகரன், பரிசு வழங்கினார்.

Advertisement