டென்னிஸ்: பைனலில் வைஷ்ணவி

தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-4' வீராங்கனை, இந்தியாவின் வைஷ்ணவி அக்தர், 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற ரஷ்யாவின் லஸ்குடோவாவை எதிர்கொண்டார்.
'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை 7-6 என வென்ற வைஷ்ணவி, அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றினார். இரண்டு மணி நேரம், 13 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் வைஷ்ணவி, 7-6, 6-3 என நேர் செட்டில் வென்று பைனலுக்கு முன்னேறினார்.
பெண்கள் இரட்டையர் பைனலில் வைஷ்ணவி, தாய்லாந்தின் புனின் ஜோடி, ரஷ்யாவின் டேரியா, ஜெலின்ஸ்கியா ஜோடியிடம் 4-6, 4-6 என்ற கணக்கில் தோற்று, இரண்டாவது இடம் பெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement