நாரணாபுரத்தில் ஒரு ஆண்டாக கிடப்பில் குடிநீர் தொட்டி பணி

சிவகாசி : சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சி ரத்தினம் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக அதே பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டிற்கு முன்பு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி துவங்கப்பட்டது. தொட்டி கட்டப்பட்டு பூச்சுகள் பாதி மட்டும் நடந்த நிலையில் அடுத்த கட்டப் பணிகள் துவங்கவில்லை. பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் பாலாஜி நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தரைமட்ட குடிநீர் தொட்டி ஒரு ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் அப்படியே போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக குடிநீர் தொட்டி கட்டும் பணிகளை முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
-
அறுவடைக்கு தயாரான நித்திய கல்யாணி
-
மூன்று வாகனங்கள் மோதி விபத்து : 7 பேர் காயம்
-
போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது