வீட்டில் படுத்திருந்த தேங்காய் வியாபாரி சாவு
பனமரத்துப்பட்டி, மல்லுார், செவந்தாம்பட்டியை சேர்ந்த தேங்காய் வியாபாரி மதியழகன், 55. அவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம், வீட்டில் படுத்துக்கொண்டு, 'டிவி' பார்த்துக்கொண்டிருந்த மதியழகன், மாலை, 6:30 மணிக்கு இறந்து கிடந்தார். கழுத்து பகுதியில் சிறு ரத்தக்காயம் இருந்தது. மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'தடய அறிவியல் போலீசார் ஆய்வு செய்தனர். 'ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டு இறந்திருக்கலாம். இரு ஆண்டுக்கு முன், இதய நோய்க்கு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். எறும்புகள் கடித்து சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. பரிசோதனையில் இறப்புக்குரிய காரணம் தெரியும்' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement