டூ வீலர் மீது கார் மோதி வாலிபர் பலி

சாத்துார், : தாயில்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 30.தனியார் நிறுவன ஊழியர். நேற்று டூ வீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் வந்து விட்டு காலை 10:00 மணிக்கு தாயில்பட்டி விலக்கில் திரும்பிய போது எதிரில் வந்த கார் மோதியது.சம்பவ இடத்தில் அவர் பலியானார். கார் டிரைவரை போலீசார் தேடுகின்றனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement