சுரங்கப்பாதை ஆக்கிரமிப்பு

ஓமலுார், சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க, மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பண்ணப்பட்டி பிரிவு சாலையில், சுரங்கப்பாதையுடன் கூடிய மேம்பாலம் உள்ளது. அந்த சுரங்கப்பாதையை, அடிக்கடி மினி வேன், தள்ளு வண்டி கடைகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன.


இதனால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சில வாகனங்கள் தொடர்ந்து, 'பார்க்கிங்'காக நிறுத்தப்படுகிறது. அதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement