படகு இல்லம் அருகே போக்குவரத்து நெரிசல்



ஏற்காடு, ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அவர்கள் அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பக்கோடா பாயின்ட், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். பக்ரீத் விடுமுறை நாளான நேற்றும், ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர்


. அதில் படகு இல்லத்துக்கு அதிகமான சுற்றுலா பயணியர் சென்றனர். இதனால் அவர்களது கார்களை, அங்குள்ள, 'பார்க்கிங்' பகுதியில் நிறுத்தாமல் படகு இல்ல சாலை ஓரத்திலேயே நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் மற்ற வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, போக்குரவத்து நெரிசல் உருவானது. ஒரு மணி நேரம், வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. பின் ஏற்காடு போக்குவரத்து போலீசார், சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

Advertisement