குன்றக்குடியில் நாளை வைகாசி விசாக விழா

காரைக்குடி : குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் வைகாசி விசாக விழா நாளை நடைபெறுகிறது.

காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து சண்முகநாதப் பெருமான் வெட்டிவேர் அலங்காரத்தில் ஆதீனமட கொலு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து 9:30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வரவேற்பு நிகழ்ச்சியும், காலை 10:30 மணிக்கு வரவேற்பு தமிழ் மாலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காலை 11:30 மணிக்கு திருமுழுக்காட்டலும், மதியம் 12:30 மணிக்கு பச்சை சாத்துப்படியும் பூஜையும் நடைபெறுகிறது. காலை மற்றும் மாலையில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இரவு 10:00 மணிக்கு சண்முகநாதப் பெருமான் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Advertisement