விளம்பரம் எழுத கட்சிகள் ஆயத்தம் கருப்பு - வெள்ளை வர்ணம் அழிப்பு

பொன்னேரி:பொன்னேரி - தச்சூர் மாநில நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, சாலை மைய தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.
பொன்னேரியில், கடந்த ஏப்., 18ல் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வரின் வருகையால், பொன்னேரி - தச்சூர் சாலை முழுதும் சாலை மைய தடுப்புச்சுவர்களில், புதிதாக கருப்பு - வெள்ளை வர்ணம் பூசப்பட்டது.
தற்போது, கருப்பு - வெள்ளை வர்ணத்தை அழித்து, விளம்பரங்கள் எழுத தனியார் மற்றும் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
இதற்காக, சாலை மைய தடுப்பு பகுதிகளில், ஆங்காங்கே வெள்ளை வர்ணம் பூசப்பட்டு இருக்கிறது.
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான பயணத்திற்கும், விபத்துகளை தவிர்க்கவும் சாலை மைய தடுப்புகளும், அதில் கருப்பு - வெள்ளை வர்ணமும் பூசப்படுகிறது.
இதற்காக பல லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. இது, தனிநபர் மற்றும் கட்சிகளின் வசதிக்காக அழித்து, அதில் விளம்பரங்களை எழுத உள்ளதை நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பது, வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சாலை மைய தடுப்புகளில் விளம்பரங்கள் எழுதுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.