கால்வாய் பாலத்தை புதுப்பிக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் இருந்து, பெரவள்ளூர் செல்லும் சாலையில் உள்ள கால்வாய் பாலம் பராமரிப்பு இன்றி தூர்ந்துள்ளது. பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் செடிகள் வளர்ந்து, கான்கிரீட் கட்டுமானங்களுக்கு சேதமடைந்துள்ளது.

தடுப்புச்சுவர், துாண்கள் உள்ளிட்ட பகுதிகளில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வருகின்றன. மழை பெய்தால், பாலத்தின் மீது மழைநீர் தேங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில், சோழவரம் ஒன்றிய நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக, வாகன ஓட்டிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர். எனவே, பராமரிப்பு இன்றி கிடக்கும் பாலத்தை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement