சூப்பர்வைசர் தற்கொலை 

திருவாடானை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா குமரன் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் 26. இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தங்கி காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, தொண்டி பகுதியில் தனியார்நிறுவன பால் விற்பனை சூப்பர்வைசராக வேலை பார்த்தார்.

அஜித்குமார் நேற்று சாணி பவுடரை குடித்தார். பஸ்சில் திருவாடானைக்கு வந்து அங்கு பால்கடையை ஆய்வு செய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார். திருவாடானை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அஜித்குமார் இறந்தார்.

தற்கொலைக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையா அல்லது வேறு காரணமா என திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement