இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று; இதுவரை 5,755 பேர் பாதிப்பு

1

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 5,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கொரோனா வகை தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. தினமும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 5,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மாஸ்க் அணியும் படி மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Advertisement