சிவகங்கை மாவட்டத்தில் பக்ரீத் தொழுகை

சிவகங்கை, : சிவகங்கையில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிவகங்கை வாலாஜா நவாப் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் தொழுகையை மெளலானா முஹம்மது அன்சர் நடத்தினார். மெளலானா பிலால் முகம்மது சொற்பொழிவாற்றினார். வாலாஜா நவாப் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.

தேவகோட்டையில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் சேர்ந்தவர்கள் ராம்நகர் ஈத்கா மைதானத்தில் ஒன்றாக கூட்டு சிறப்பு தொழுகை நடத்தினர். முகமது பைசூல் ரஹ்மான் குத்பா ஓதினார். அப்துல் கலீல், அன்சாரி சிறப்புரை ஆற்றினர்.

தேவகோட்டை ஜமாஅத் தலைவர் மகபூப் பாட்சா, செயலாளர் ஆதம் மாலிக், முகமது சஹீகுள் பர்க்கி உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் டைமன் சிட்டி நகரில் தொழுகை நடந்தது. கிளை தலைவர் உமர் தலைமையில் நடந்த தொழுகையில் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ஹாரூன் உரையாற்றினார்.

* காரைக்குடி காட்டுத்தலைவாசல் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. கிளைத் தலைவர் நாசர் முகைதின் தலைமையேற்றார். மண்டலத் தலைவர் மின்னத்துல்லா மற்றும் கிளை நிர்வாகிகள்முன்னிலை வகித்தனர். மாவட்ட பேச்சாளர் முகமது ஹாரிஸ் சிறப்புரையாற்றினார். கிளை துணைத் தலைவர் பாரூக், நகரச் செயலாளர் சாதிக், துணைச் செயலாளர் சாதிக் பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காரைக்குடி வ.உ.சி., ரோடு ஈத்கா மைதானத்தில்,காரைக்குடி ஐக்கிய முஸ்லிம் ஜமாத் கமிட்டி சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. தலைவர் அப்துல் ரகுமான் தலைமையேற்றார்.

செயலாளர் அலி மஸ்தான், பொருளாளர் சாதிக் பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* திருப்புத்துார் அச்சுக்கட்டு ஈத்கா மைதானத்தில்நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர். தொழுகை சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி முகமது பாரூக் ஆலிம் தலைமையில் நடந்தது.

* இளையான்குடி, மானாமதுரையில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

Advertisement