மூன்று வாகனங்கள் மோதி விபத்து : 7 பேர் காயம்

கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், 7 பேர் காயம் அடைந்தனர்.
விழுப்புரத்தில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி, திருநாவலுார் பகுதி மடப்பட்டு மேம்பாலம் அருகே, நேற்று மதியம் 2:00 மணிக்கு மினி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே ஆடு சென்றதால், டிரைவர், வடலுாரை சேர்ந்த சுரேஷ்,51; பிரேக் போட்டு, வேனை நிறுத்தினார்.
அப்போது, ஐதராபாத்தில் இருந்து திருச்சி நோக்கி, வேலுாரை சேர்ந்த பாலன்,55; என்பவர் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரி, அந்த மினி வேன் பின்னால் மோதியது.
இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருந்து திருச்சி நோக்கி ராணிப்பேட்டையை சேர்ந்த யுவராஜ்,36; என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து, கன்டெய்னர் லாரி மீது மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த செல்வி,30; ரவி,40; ஜெயக்குமார்,44, செந்தாமரை,56, சுபா ஆனந்தி,47, உள்ளிட்ட 7 பேர் காயமடைந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் வரும்: அடித்து சொல்கிறார் இ.பி.எஸ்.,
-
டில்லியில் வங்கதேசத்தினர் 66 பேர் கைது: நாடு கடத்தும் பணி தீவிரம்
-
சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம்
-
கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு: தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு
-
இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று; இதுவரை 5,755 பேர் பாதிப்பு
-
மதுரையில் இன்று மாலை பா.ஜ., பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்