திறந்து கிடக்கும் மேன்ஹோல் விபத்து அபாயம்

சாத்துார் : சாத்துார் வெம்பக்கோட்டை ரோட்டில் திறந்து கிடக்கும் மேன் ஹோலால் நாளுக்கு நாள் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.
சாத்துார் நகராட்சியில் வெம்பக்கோட்டை ரோட்டின் இருபுறமும் வணிக நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த ரோட்டில் இருபுறமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதியதாக வாறுகால் கட்டும் பணி நடந்தது. ரோட்டின் இரு புறமும் நடந்த இந்த பணியில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டால் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதற்காக மேன் ஹோல் அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் ஆங்காங்கே மேன் ஹோல் மூடி போடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. வெம்பக்கோட்டை ரோட்டில் மேட்டமலை கூட்டுறவு வங்கி மூலம் செயல்படும் மருந்தகம் முன்பு இதுபோன்ற அமைக்கப்பட்டுள்ள ஒரு மேன்ஹோல் மூடி போடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.
திறந்து கிடக்கும் இந்த பகுதி ரோடு மட்டத்திற்கு உள்ளதால் வாகன ஓட்டிகள் பலர் இந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் முன் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும்
-
இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று; இதுவரை 5,755 பேர் பாதிப்பு
-
மதுரையில் இன்று மாலை பா.ஜ., பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்
-
இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--