இடவசதியின்றி தற்காலிக பஸ் ஸ்டாண்ட்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இடவசதியின்றி அமைந்துள்ளதால் தினமும் ஒரு விபத்து ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ள நகராட்சி பஸ் ஸ்டாண்ட் இடித்து புதியதாக நவீன வசதிகளுடன் கடந்த 3 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகிலேயே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்ட் முழுவதும் ரோடு அமைக்கும் பணி பாதாள சாக்கடை திட்ட பணிகள் செய்ய இருப்பதால் கடந்த வாரம் இந்த தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மதுரை ரோடு நெசவாளர் காலனி எதிர்ப்புறம் உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது.
இங்கு பஸ்கள் உள்ளே வந்து வெளியில் செல்ல இடவசதி குறைவாகவே உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி. நெசவாளர் காலனியிலிருந்து வரும் டூவீலர்கள், ரயில்வே மேம்பாலம் பாலத்திலிருந்து அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் நெரிசலில் சிக்கி தவிக்கிறது. 5 நாட்களில் மட்டும் 3 க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது.
இந்தப் பகுதியில் போக்குவரத்து போலீசார் போதுமான அளவில் பணியில் அமர்த்தி போக்குவரத்து சரி செய்ய வேண்டும். தேவையான பேரி கார்டுகளை வைத்து வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும். தற்காலிகமாக பஸ்ஸ்டாண்டில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டும்.
மேலும்
-
இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று; இதுவரை 5,755 பேர் பாதிப்பு
-
மதுரையில் இன்று மாலை பா.ஜ., பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்
-
இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--