முட்டக்குறிச்சி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

இளையான்குடி: இளையான்குடி அருகே முட்டக்குறிச்சி கிராமத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து ஜூன்6ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.

தொடர்ந்து மகாலட்சுமி ஹோமம்,நவக்கிரக ஹோமம்,மாலை 4:00 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜை, 7ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றன, இன்று 8ம் தேதி காலை யாகசாலை பூஜை, அதனைத் தொடர்ந்து பூர்ணாஹூதி நடக்கிறது.

அர்ச்சகர்கள் புனித நீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று காலை 10:30 மணியிலிருந்து 11:00 மணிக்குள் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.

ஏற்பாடுகளை ஹிந்து சத்ரிய நாடார் உறவின்முறையாளர்கள் மற்றும் திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement