மாவட்டத்தில் பக்ரீத் கொண்டாட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட பள்ளி வாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

விருதுநகர் பெரிய பள்ளிவாசல் மைதானத்தில் ஜமாத் தலைவர் செய்யது அபுதாஹிர் அலி தலைமையில் தொழுகை நடந்தது. தொழுகையை சுல்தான் இப்ராஹிம் நடத்தினார்.

அதே போல கல் பள்ளி வாசலில் காலை ஜமாத் தலைவர் செய்யது முஹம்மது தலைமையில் ஷா நவாஸ், சின்னபள்ளி வாசல் ஜமாத் தலைவர் நுாருல் அமீன் தலைமையில் முஹம்மது மைதீன், மதீனா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சிக்கந்தர் பாட்சா தலைமையில் அப்துல் ரஹ்மான் முன்னிலை, ரோஜா நகர் பள்ளி அஹ்லுஸ் சுன்னத்வல் முஸ்லிம் ஜமாத் தலைவர் தாஜூதீன் தலைமையில் அப்துல் கரீம்,கூரைக்குண்டு மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளி வாசலில் ஜமாத் தலைவர் ஹபீப் முகம்மது தலைமையில் காசிம் தொழுகை நடத்தினார்கள்.

Advertisement