மாவட்ட பேரவை கூட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் ராஜகோபாலன் தலைமையில் நடந்தது. இதில் மாநில தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் ராஜசேகரன், துணைத் தலைவர் செல்வகுமார், பொருளாளர் புகழேந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் ஒன்றிய அளவில் ஊராட்சி செயலர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட பொருளாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.

Advertisement