கஞ்சா விற்ற பெண் கைது

தேவதானப்பட்டி : கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி இன்பவள்ளி 52. அதே பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை உத்தரவில்

பெண் போலீசார் இன்பவள்ளியை சோதனை செய்தனர். அவர் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த 160 கிராம் கஞ்சா பொட்டலம் கைப்பற்றப்பட்டது. இன்பவள்ளி கைது செய்யப்பட்டார்.

இவருக்கு விற்பனை செய்த கோட்டார்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசனை 26. தேவதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.-

Advertisement