போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது

தேனி : ஆண்டிபட்டி டி.வி., ரெங்கநாதபுரம் லோகேஸ்குமார்24. தேனி சுக்குவாடன்பட்டியில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிகிறார்.
நண்பர்கள் மோகன்ராஜ், லட்சுமி நாரயணன் ஆகியோருடன் டூவீலரில் நேருசிலை அருகே சென்றார். அப்போது, அவர்களது டூவீலர் மீது மோதுவது போன்று அருண் டூவீலரை ஓட்டினார். இதனால் இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தேனி போலீஸ் ஸ்டேஷனிற்கு விசாரணைக்கு வந்திருந்தனர்.போலீஸ் ஸ்டேஷனிற்கு வெளியே காத்திருந்போது அருண் ஆயுதத்தால் லோகேஸ்குமாரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.
காயமடைந்த லோகேஸ்குமார் அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் தேனி போலீசார் அருணை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று; இதுவரை 5,755 பேர் பாதிப்பு
-
மதுரையில் இன்று மாலை பா.ஜ., பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்
-
இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
Advertisement
Advertisement