டில்லியில் வங்கதேசத்தினர் 66 பேர் கைது: நாடு கடத்தும் பணி தீவிரம்

புதுடில்லி: டில்லியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 66 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை நாடு கடத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, வடமேற்கு டில்லியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்தனர்.
அவர்களது ஆவணங்களை போலீசார் சரி பார்த்தனர். அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 66 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது என வங்கதேச அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து விசா மற்றும் குடியேற்ற விதிமுறைகளை மீறி வாழ்ந்து வந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.







மேலும்
-
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்: பத்திரிகையாளர் குமுறல்!
-
பாதாள சாக்கடையில் தவறி விழுந்த தூய்மை பணியாளர் பலி
-
அதிரடி காட்டிய பிரம்மோஸ்: பாக்., விமானப்படை தளங்களை தகர்த்த 19 ஏவுகணைகள்!
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்!
-
இது ரொம்ப தவறுங்க... எலான் மஸ்கை எச்சரிக்கிறார் துணை அதிபர் வான்ஸ்!
-
அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் வரும்: அடித்து சொல்கிறார் இ.பி.எஸ்.,