தகிக்கும் தலைநகர் டில்லி: ஜூனில் முதல்முறையாக 40 டிகிரியை கடந்த வெப்பநிலை

புதுடில்லி: தலைநகர் டில்லியில் இந்த மாதத்தில் முதல்முறையாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை கடந்துள்ளது.



டில்லியில் கடந்த சில நாட்களாக சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறி உள்ளது. நகரின் பல பகுதிகளில் அதிக வெப்பம் பதிவாகி இருக்கிறது. சப்தர்ஜங் பகுதியில் இன்று அதிகளவாக 42.1 டிகிரி செல்சியஸ் நிலவியது. பாலம் ஸ்டேஷனில் 42.6 டிகிரி செல்சியஸ் காணப்பட்டது.


அதிகபட்ச வெப்பநிலை தெற்கு டில்லியின் அயாநகரில் பதிவாகி உள்ளது. இங்கு பதிவான வெப்பநிலை 44.1 டிகிரி செல்சியஸ் ஆகும். லோதி சாலையில் 42.3 டிகிரி செல்சியஸ் நிலவியது.


இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:


அடுத்த 4 நாட்களுக்கு டில்லியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கடும் வெப்பம் நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களுக்கு மக்கள் தயாராகி கொள்ள வேண்டும்.


டில்லியில் பகல்நேர வெப்பநிலையானது 44 டிகிரி செல்சியசை எட்டக்கூடும். அடுத்த வாரம் முதல் சீதோஷ்ண நிலை மாதிரி மழைக்கான வாய்ப்பு காணப்படுகிறது.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement