சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு சிறை

திருவள்ளூர்:கடம்பத்துார் ஒன்றியம் விடையூர் பகுதியில் உள்ள செங்கல் சேம்பரில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்லதுரை, 19 என்ற இளைஞர் தங்கி வேலை செய்து வருகிறார்.

ஒரு மாதத்துக்கு முன் அப்பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்த 4 வயது சிறுமியை செல்லதுரை பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் செங்கல் சேம்பரில் இருந்து தலைமறைவானார்.

இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் உளுந்துார்பேட்டையில் இருந்த நேற்று முன்தினம் செல்லதுரையை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement