வடகுப்பம் குளத்தில் குவியும் பிளாஸ்டிக் கழிவு

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், வடகுப்பம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் வாகனங்களில் நெல் மூட்டைகளை எளிதாக கொண்டுவர முடிகிறது.

இந்நிலையில், இந்த நெல் கொள்முதல் நிலையத்தின் எதிரே உள்ள குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகின்றன. கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் நெல் சுத்திகரிக்கப்படுவதில் வீணாக வெளியேறும் பதர்களை சேகரிப்பதற்காக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் வீணாகும் பிளாஸ்டிக் பைகள், குளத்தில் வீசப்படுகின்றன. குளத்தில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் நெல் கழிவுகளால் குளம் துார்ந்து வருகிறது.

இதனால் பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் நீர்வளம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. குளத்தில் குவியும் நெல் பதர்களையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement