'கரும்புள்ளி' பகுதிகளில் முன் மாதிரி திட்டம் புதிய முயற்சியில் தமிழக போலீஸ்
சென்னை: அடிக்கடி குற்றங்கள் நடக்கும், 15,000க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்தோருக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட முன் மாதிரி திட்டங்களை செயல்படுத்தும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில், 1,300க் கும் மேற்பட்ட சட்டம் - ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் உள்ளன. அவற்றில், அடிக்கடி அடிதடி, வழிப்பறி, குடிபோதையில் தகராறு உள்ளிட்ட குற்றங்கள் நடக்கும் பகுதிகளை, 'கரும்புள்ளி கிராமம்' என, போலீசார் அடையாளப்படுத்தி உள்ளனர்.
கூடுதல் கவனம்
அந்த இடங்களில் மோதல் மற்றும் குற்றங்கள் நிகழ்வதை தடுக்க, கூடுதல் கவனமும் செலுத்தி வருகின்றனர்.
அத்துடன், கரும்புள்ளி கிராமம் என, அடையாளம் காணப்பட்ட, 15,000க்கும் மேற்பட்ட பகுதிகளில், குற்றங்களில் ஈடுபடுவோருக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருதல், அவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தருதல் என, முன் மாதிரி திட்டங்களையும் போலீசார் செயல்படுத்தி வருகின்றனர்.
பள்ளியில் சேர்ப்பு
இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு, தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லையில் அமைந்துஉள்ள, பெரும்பாக்கம் பகுதியில், 'முன்மாதிரி திட்டம்' என்ற புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அங்கு பள்ளிகளில் இடைநின்ற, 30 மாணவர் கள் கண்டறியப்பட்டு, மீண்டும் அப்பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் போலீசாரால் சேர்க்கப்பட்டனர். தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி யும் அளிக்கப்பட்டது.
வேலை இல்லாதவர்களுக்கு, பெட்ரோல் பங்க், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் வேலை பெற்று தரப்பட்டது.
இத்திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதால், மாநிலம் முழுதும் கரும்புள்ளி கிராமம் என அடை யாளம் காணப்பட்ட பகுதிகளில், முன் மாதிரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.