சிவகங்கையில் இருவருக்கு கொரோனா

சிவகங்கை: சிவகங்கையில் நகராட்சி அதிகாரி ஒருவர், கர்ப்பிணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை அருகேவுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு தனியார் கிளினிக்கில் சோதனை செய்த போது கொரோனா உறுதியானது. அதுபோல சிவகங்கை நகராட்சியில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தங்கியிருந்த சிவகங்கை காளிமுத்தன் தெரு, கர்ப்பிணியின் சொந்த ஊரிலும் சுகாதாரத்துறையினர் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

Advertisement