நடையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள நடையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சி.மெய்யூர் கிராமத்தில் உள்ள நடையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் காலை 7:00 மணி முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், வாஸ்து ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், மூல மந்திர ஹோமம் நடந்தது.

நேற்று காலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, வேத பாராயணம் மூல மந்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்தது.

காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சி.மெய்யூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement