நடையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள நடையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சி.மெய்யூர் கிராமத்தில் உள்ள நடையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் காலை 7:00 மணி முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், வாஸ்து ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், மூல மந்திர ஹோமம் நடந்தது.
நேற்று காலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, வேத பாராயணம் மூல மந்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்தது.
காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சி.மெய்யூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; நெடுஞ்சாலையில் கார்- வேன் மோதி 12 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
Advertisement
Advertisement